ஆப்நகரம்

நிலவில் நீர் இருந்தால் எங்களிடம் முதலில் கூறுங்கள் – சென்னை மெட்ரோ ட்வீட்

போதிய மழைப் பொழிவு இல்லாத காரணத்தால் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நிலவில் நீர் இருந்தால் முதலில் எங்களிடம் தெரிவியுங்கள் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் இஸ்ரோவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 23 Jul 2019, 9:26 am
நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் விசித்திரமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
Samayam Tamil isro 1


நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் நிலவில் நீர் ஆதாரங்கள் உள்ளனவா? கனிம வளங்கள் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும்.

உலக நாடுகள் அனைத்தும் சந்திரயான் திட்டத்தை ஆர்வத்துடன் உற்று நோக்கும் நிலையில், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவித், தமிழக முதல்வர், உள்பட தலைவர்கள் பலரும் இஸ்ரோ நிர்வாகத்திற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: சென்னை தண்ணீர் பஞ்சத்தை கண்டு வருந்தும் டைட்டானிக் ஹீரோ


இந்நிலையில், சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வாழ்த்துகள். எங்கள் நகரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், புதிய நீர்நிலைகளை தேடி வருகிறோம். ஒருவேளை நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதனை யாரிடம் முதலில் கூறவேண்டும் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

Also Read: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்

அடுத்த செய்தி