ஆப்நகரம்

நியூ இயர் கொண்டாட்டமா? குடைய மறந்திறாதீங்க!

ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்குப் பிறக்கவுள்ள நிலையில், பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை மையம் ஜனவரி 1 குறித்த வானிலை நிலவரங்கள் குறித்தும்...

Samayam Tamil 31 Dec 2019, 9:23 am
புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் நேற்று இரவு தொடங்கி விடியற் காலை வரை சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
Samayam Tamil download


இந்த வருடம் வடகிழக்குப் பருவ மழை செவ்வாய்க் கிழமையுடன் விடைபெறும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 1, 2ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியானது.

புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தித்திக்கும் செய்தி: ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசு!!

சென்னை மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, சேலையூர், கிண்டி, ஆலந்தூர், கோயம்பேடு உள்பட பல இடங்களில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது.

இதுகுறித்து புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வடகிழக்குப் பருவ மழைக் காலங்களில் காலை நேரத்தில் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக மழை பெய்யும், இது ஜனவரி 1, 2 தேதிகளில் தொடரும்” என்றார்.

இதன் காரணமாக வானம் மேக முட்டத்துடனே காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை ஜனவரி ஒன்றாம் தேதி, அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரைதான் இருக்கும் என அறியப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை: இன்று சுமார் தான்; ஆனால் ஒரு வருஷத்துல செம ஏற்றம்!

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் சராசரியைவிட 17 சதவீதம் குறைவாகியுள்ளது. எனினும், தமிழ்நாட்டில் மழையின் அளவு சராசரியைக் கடந்துள்ளது.

அடுத்த செய்தி