ஆப்நகரம்

விடைபெறுகிறது வடகிழக்கு, இனி 4 நாளைக்கு வானம் இப்படிதான் இருக்குமாம்!

தமிழ்நாட்டை மூன்று மாதங்களுக்கு மேலாகச் குளிச்சியாக வைத்திருந்த வடகிழக்கு பருவமழை இன்றோடு நிறைவு பெறும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Jan 2020, 4:06 pm
தமிழ்நாட்டிற்குக் கடந்த 3 மாதங்களாக நீர் வழங்கி வந்த வடகிழக்கு பருவ மழை, இன்றோடு விடைபெறும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், வடகிழக்கு பருவ மழை விடைபெறுவதையடுத்து, அடுத்து வரும் 4 நாட்களுக்குச் சென்னை உள்படத் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே காணப்படும் என அறிவித்துள்ளது.
Samayam Tamil in-chennai_rain_0


சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். பெரும்பாலான மாவட்டங்களில் காலை நேரத்தில் பனிப்பொழிவு காணப்படும். 3 நாட்களுக்குப்பின் பனிப்பொழிவின் அளவு அதிகரித்துக் காணப்படும்.

வடகிழக்குப் பருவ மழை இன்றோடு விடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக வடகிழக்கு காலங்களில் பெய்யும் மழையின் அளவைவிட, இந்த ஆண்டு 2 சதவீதம் அதிகம் மழைப் பதிவாகியுள்ளது. இது அக்டோபர் முதல் டிசம்பர் காலகட்டத்தில் வரையிலானது.

’என்ன பசி மயக்கமா’ - சக அமைச்சரை கலாய்த்த ஜெயக்குமார்; சிரிப்பில் மூழ்கிய அரங்கம்!

வடகிழக்கு பருவ மழையைப் பொறுத்தவரை, அதிக பட்சமாக நீலகிரியில் 64 விழுக்காடுகள், ராமநாதபுரம், நெல்லையில் தலா 45 விழுக்காடுகள், தூத்துக்குடியில் 31 விழுக்காடுகளும், புதுக்கோட்டையில் 29 விழுக்காடுகளும் பதிவாகியுள்ளது. அதேபோல், குறைந்தப்பட்சமாக புதுக்கோட்டையில் 27 விழுக்காடுகளும், மதுரை, வேலூர், பெரம்பலூர், திருவண்ணாமலையில் தலா 24 விழுக்காடுகளும் பதிவாகியுள்ளது.

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் வரை 63 செமீ மழைப் பதிவாகியுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 76 செமீ மழைப் பதிவாக வேண்டும்.

வட இந்தியாவை உறையச் செய்யும் பனி!

இது 16 விழுக்காடுகள் குறைவு. அதுவே, ஜனவரி மாதம் மட்டும் சென்னையில் 34 மிமீ பதிவாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் வழக்கமாக 5 மிமீ அளவிலே மழைப் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி