ஆப்நகரம்

சென்னை சிறுமி வன்கொடுமை வழக்கில் 5 போ் ஜாமீன் கோாி மனு

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மாற்றுத் திறன் கொண்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் 5 போ் ஜாமீன் கோாி மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

Samayam Tamil 1 Aug 2018, 12:49 pm
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மாற்றுத் திறன் கொண்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் 5 போ் ஜாமீன் கோாி மனுத்தாக்கல் செய்துள்ளனா்.
Samayam Tamil Chennai Minor Girl Rape


சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த சிறுமியை 7 மாதங்களாக மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 17 போ் கடந்த 18ம் தேதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 பேருக்கும் வருகிற 10ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து மகளிா் நீதிமன்றம் உத்த்ரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 17 பேரில், முருகேஷ், ஜெய் கணேஷ், சூா்யா, ஜெயராமன், ராஜசேகா் ஆகிய 5 பேரும் ஜாமீன் கோாி சென்னை மகளிா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில் சென்னை அயனாவரத்தில் சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் அந்த குடியிருப்பில் உள்ள 22 போ் ஈடுபட்டதாகவும், அதில் 17 போ் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் தங்களுக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடா்பும் கிடையாது தவறாக தங்களை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்கவேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்பதாகவும் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி