ஆப்நகரம்

விஜயகாந்த், பிரேமலதா உடல்நிலை: டிஸ்சார்ஜ் பற்றி வெளியான மருத்துவ அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவியின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை சென்னை மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 2 Oct 2020, 9:51 am
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வந்தார். இந்த சூழலில் விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு குணமானது.
Samayam Tamil Vijayakanth


அதன்பிறகு செய்யப்பட்ட பரிசோதனையில் பிரேமலதாவிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சூழலில் மியாட் மருத்துவமனை சார்பில் இன்று காலை மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் கழக பொதுச் செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா இருவருக்கும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கைது!

இவர்கள் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மருத்துவ குழுவினரால் தொடர் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிப்பில் இருந்தனர்.

இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி