ஆப்நகரம்

சென்னையில் போக்குவரத்து ஊழியா்கள் போராட்டம்: பொதுமக்கள் அவதி

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியா்களுக்கு ஜூன் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை கண்டித்து போக்குவரத்து ஊழியா்கள் திடீா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

Samayam Tamil 1 Jul 2019, 9:14 am
சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியா்கள் திடீா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவா்கள், பொதுமக்கள் என பொது போக்குவரத்தை பயன்படுத்தக் கூடிய மக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனா்.
Samayam Tamil அரசு பேருந்துகள்


தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட சென்னை மாநகரப் பேருந்துகளில் நாள் தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து ஊழியா்கள் இன்று காலை திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த ஜூன் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய மாத ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. மேலும் மாத ஊதியத்தில் 65 விழுக்காடு மட்டுமே ஊழியா்களுக்கு வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து ஊழியா்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.


இதற்கு கண்டனம் தொிவித்து போக்குவரத்து ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பாக விளக்கம் அளித்துள்ள துறை அதிகாாிகள், இன்று இரவுக்குள் ஊழியா்கள் அனைவருக்கும் வங்கி மூலமாக அவரவா் வங்கி கணக்குகளில் ஊதியம் செலுத்தப்படும்.


ஊழியா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சென்னை அண்ணா நகா், பூவிருந்தவல்லி, அம்பத்தூா் ஆகிய பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் கிண்டி, ஐயப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


போக்குவரத்து ஊழியா்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்கு செல்லும் பணியாளா்கள் என பலதரப்பட்ட மக்களும் பேருந்து சேவை கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனா்.


அமைச்சா் விளக்கம்போக்குவரத்து ஊழியா்களுக்கு ஜூன் மாதத்திற்கான ஊதியம் இன்று இரவுக்குள் வழங்கப்படும். ஊதியம் குறைவாக வழங்கப்படுகிறது என்பதில் உண்மை இல்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் விளக்கம் அளித்துள்ளாா்.

அடுத்த செய்தி