ஆப்நகரம்

சென்னை பரங்கி மலை ரயில் விபத்து: 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 4 பிரிவுகளில் மாம்பலம் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 31 Jul 2018, 1:15 pm
சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 4 பிரிவுகளில் மாம்பலம் ரயில்வேகாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil Chennai_Train_Accident1-EPS.


சென்னை பரங்கிமலையில் கடந்த வாரம் மின்சார ரயிலில் தொடங்கியபடி சென்ற 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இவர்கள் மரணத்திற்கு கூட்ட நெரிசல்தான் காரணம் என்று கூறப்பட்டது. சென்னையில் தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வேலைக்குசெல்பவர்களில் பொரும்பாலானோர் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர். கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் வேலை நேரங்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் எப்போதும் அதிகமாக காணப்படுவது வழக்கம்.


இந்நிலையில் கடந்த வாரம் மாம்பலம் – கோடம்பாக்கம் இடையே உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததால்நீண்ட நேரமாக ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதையில்ரயில்கள் மாற்றிவிடப்பட்டது. இந்நிலையில் கடற்கரையிலிந்து திருமால்பூர் செல்லும்ரயில், பரங்கி மலை வந்தபோது, ரயிலில் தொங்கிக்கொண்டிருந்த பயணிகள் கான்கிரீட் தடுப்பில் பயங்கரமாக மோதி கிழே விழுந்தனர்.இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

அடுத்த செய்தி