ஆப்நகரம்

இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கிய காவலர்!

சென்னையில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை காவலர் ஒருவர், அடித்து உடைக்கும் சாட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

Samayam Tamil 31 Mar 2019, 6:28 pm
சென்னையில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தஇரு சக்கர வாகனத்தைகாவலர் ஒருவர்,அடித்து உடைக்கும் சாட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
Samayam Tamil a-police-constable-attacks-a-bike-in-chennai-1554032658


சென்னை கிண்டிசத்யா நகரில் உள்ள பகுதியில் உள்ள இடத்தில் இளைஞர்ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்துவாகனத்தில் வந்த காவலர் ஒருவர், இரு சக்கர வாகனத்தை தடியால் அடித்து உடைத்தார். வாகனத்தில் தடியால் அடித்து உடைத்தார். வாகனத்திற்கு சொந்தமான நபர், எவ்விதவாக்குவாதத்திலும் ஈடுபடமால் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார்.

இரு சக்கர வாகனத்தை காவலர் ஒருவர்,அடித்து நொறுக்கியபோது உதவி ஆய்வாளர் ஒருவரும் உடனிருந்தார். இது குறித்து சமந்தப்பட்ட காவல்துறையினரிடம் கேட்டபோது, கல்லூரி மாணவர் ஒருவர் கஞ்சா வாங்க முயன்றதாகவும், பலமுறை கூறியும் போக மறுத்ததால் அவரின் வாகனத்தைதாக்கியதாகவும் கூறியுள்ளனர்.

வாகனம் எதற்காகசேதமடைந்தது எனப் பெற்றோர் கேட்கும்போதுஅந்தமாணவனால் எப்படி பதில் கூற முடியும் என்பதற்காக தாக்கியதாககாவல்துறை தெரிவித்துள்ளது. எனினும், இரு சக்கர வாகனத்தை காவலர் அடித்து நொறுக்கியதற்கு,பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இரு சக்கர வாகனத்தைபோலீசார் அடித்து நொறுக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி