ஆப்நகரம்

காவிரி தீர்ப்பு எதிரொலி : சட்டம் ஒழுங்கு குறித்து சென்னை காவல் ஆணையருடன் முதல்வர் ஆலோசனை

காவிரி தீர்ப்பு வெளியான நிலையில் சட்டம் ஒழுங்கு குறித்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்திவருகிறார்.

Samayam Tamil 16 Feb 2018, 11:48 am
காவிரி தீர்ப்பு வெளியான நிலையில் சட்டம் ஒழுங்கு குறித்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்திவருகிறார்.
Samayam Tamil chennai police commissioner and edappadi palanisamy consulting for law and order
காவிரி தீர்ப்பு எதிரொலி : சட்டம் ஒழுங்கு குறித்து சென்னை காவல் ஆணையருடன் முதல்வர் ஆலோசனை


காவிரியில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.5 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரியில் இருந்து 264 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என்று தமிழகம் கோரியிருந்தது. ஆனால் , 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுருந்தது.

ஆனால் இன்று உச்சநீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பில், தமிழகத்தில் 20 டிஎம்சி அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. எனவே காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தீர்ப்பால் தமிழகத்தில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதால் , சட்ட ஒழுங்கு குறித்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். மேலும் தமிழகம், கர்நாடகா இடையே பேருந்துப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி