ஆப்நகரம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 18 Oct 2018, 4:38 pm
மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rajendra balaji


மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், ‘கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அது வளர்ந்தால் நாட்டுக்கே ஆபத்து’ என்று கூறினார்.

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்து, மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாகவம், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பெண் சுசீலா பொன்னுசாமி என்பவர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார்.
அதில் அவர், ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு என்னை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள 22 லட்சத்துக்கும் லேமான மாற்றுத்திறானிகளையும், அவர்களது குடும்பத்தாரையும் காயப்படுத்தியுள்ளது. இதனால் அனைவரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமைச்சர் பதவியில் இருந்தும் ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்’. இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி