ஆப்நகரம்

விரைவில் பத்திரிகையாளர் மன்ற தேர்தல்

சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 29 Aug 2016, 11:29 am
சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil chennai press club election should be conducted within 3 months hc
விரைவில் பத்திரிகையாளர் மன்ற தேர்தல்


இது தொடர்பாக, சென்னை 9-வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில், பத்திரிகையாளர் ஆர்.மோகன் தாக்கல் செய்த மனுவில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் (சென்னை பிரஸ் கிளப்) நிர்வாகிகள் தேர்தல் கடந்த 1999-ஆம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக் காலம் கடந்த 2001-ஆம் ஆண்டு முடிந்தது. அதன் பின்பு, இதுவரை நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பத்திரிகையாளர் மன்ற தேர்தலை 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்கவும், தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவை நியமித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பத்திரிகையாளர் மோகன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், 2011ஆம் ஆண்டு மார்ச் 7க்கு பிறகு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளனர். மேலும், தேர்தலை நடத்த கடந்த 2015ஆம் ஆண்டில் கீதபிரியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு செல்லாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். விரைவில் பத்திரிகையாளர் மன்றத் தேர்தல் குறித்த அறிவுப்புகள் வெளியாகும் என கருதப்படுகிறது.

அடுத்த செய்தி