ஆப்நகரம்

சென்னை: மதக்கலவரத்தைத் தூண்டியதாக இந்து அமைப்பினர் கைது!

சென்னை தண்டையார்பேட்டையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக இந்து அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்

Samayam Tamil 24 Aug 2018, 1:55 pm
சென்னை தண்டையார்பேட்டையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக இந்து அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்
Samayam Tamil arrest


கடந்த 19ம் தேதி சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ‘பாரத் முன்னணி’ என்ற இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொதுக்கூட்டம் நடத்தினர். இதில் இந்துமக்கள் சேனா தலைவர் சரவணன், ருத்ர சேனா தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்து அமைப்பினர் நடத்திய இந்த பொதுக்கூட்டத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக 6 பேர் மீது ஆர்கே நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையத்து, நேற்று இரவு தஞ்சாவூரில் இருந்த சரவணன், தங்கராஜ் ஆகிய இரண்டு பேரை போலீசார் திடீரென்று கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து தகவல் அறிந்த இந்து அமைப்பினர், இன்று காலை ஆர்கே நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால், ஆர்.கே நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி