ஆப்நகரம்

குண்டும் குழியுமான ஆர்கே நகர் தொகுதி: மரண பயத்தில் மக்கள்...!!

சென்னையில் இருக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக இருப்பதால், தற்போது மழையும் பெய்து வருவதால் மக்கள மரண பயத்தில் பயணித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

Samayam Tamil 19 Sep 2019, 9:53 am
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பல சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவ மழை வருவதற்கு முன்பே வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது பெய்யும் சிறு மழைக்கே சாலைகளில் நீர் தேங்கி மக்களுக்கு இடையூறாக இருகிறது.
Samayam Tamil Chennai Roads


இதுகுறித்து ஆர்கே நகர் தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.மருது கணேஷ் விடுத்திருக்கும் அறிக்கையில், ''சென்னை மாநகராட்சி (தண்டையார்பேட்டை மண்டலம்) மண்டலம் 4கிற்கு உட்பட்ட ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய முக்கிய போக்குவரத்து சாலைகளான திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சேனியம்மன் கோயில் தெரு, அருணாச்சலேஸ்வரர் கோவில் தெரு, கும்மாளம்மன் கோயில் தெரு மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலை ஆகிய சாலைகள் கடந்த சில ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.

இந்த சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாகவும், மோசமான நிலையிலும் உள்ளன. இதில் குறிப்பாக திருவொற்றியூர் நெடுஞ்சாலை , சேனியம்மன் கோயில் தெரு, அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு உள்ளிட்டவை மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதன் காரணமாக படுமோசமான நிலையில் உள்ளன.

இதனை சீரமைக்க கோரி சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கடந்த 16ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தனர். மேலும் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சாலைகளை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

புதிய 100, 200 ரூபாய் நோட்டுக்களுக்கு இங்கு மதிப்பில்லை...!!

அதேபோல் மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் அவர்களின் ஆலோசனைப்படி சென்னை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் கடந்த 8 மற்றும் 28ஆம் தேதிகளில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலரிடமும், செயற்பொறியாளரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

அடடா மழை... சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!!

ஆனால் இதுவரை அந்த சாலைகள் சீரமைக்கப்பட வில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலையில் பெய்த மழையின் காரணமாக மேற்கண்ட சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மேடு பள்ளங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் மரண பயத்தில் வாகனம் ஓட்டி வருகின்றனர்.

Chennai Weather: சென்னையில் விடிய விடிய புரட்டி எடுத்த கன மழை; வேகமா நிரம்பும் நீர் நிலைகள்!

பலர் குண்டும் குழியுமான சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரில் விழுந்து எழுந்து படுகாயமடைந்து செல்கின்றனர் . பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஏதாவது பெரிய விபத்துக்கள் நடைபெறுவதற்க்கு முன்பு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மெத்தன போக்கில் சென்னை மாநகராட்சி இருந்தால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு சென்னை மாநகராட்சி தான் பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி