ஆப்நகரம்

சென்னையில் 5 ரூபாய்க்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் காலமானார்!

சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஜெயசந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் .

Samayam Tamil 19 Dec 2018, 11:55 am
சென்னை ராயபுரத்தில்5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஜெயசந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் .
Samayam Tamil cats


மனிதர்கள் கடவுளுக்கு சமமாக மதிக்கும் ஒருவர் என்றால் அது மருத்துவர்களே. உண்மையாகவே சமூகத்திற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சில மருத்துவர்களுக்குதான் இத்தகைய மதிப்பு கிடைக்கிறது. அப்படி ராயபுரம் மக்களின் மதிப்பைபெற்றவர் மருத்துவர் ஜெயசந்திரன்.

இவர் 1971ஆம் ஆண்டு ராயபுரத்தில் கிளினிக்கை தொடங்கினார். அப்போது இவர் சிகிச்சைக்கு ரூ.2 மட்டுமே வாங்கினார். காலப்போக்கில் ரூ.5 வாங்க தொடங்கினார். அவர் மரணத்திற்கு முன்பு வரை ரூ.5 மட்டுமே சிகிச்சைக்காகபெற்றுள்ளார்.

ராயபுரம் மற்றும் சுற்றிருக்கும் பகுதியைச் சேர்ந்த ஏழை மக்கள் இங்குதான் சிகிச்சை பெற்று வந்தனர். இவரது மரணம் ராயபுர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் அவர்கொடுக்கும் சிகிச்சையைவிட, இவர் அன்பாக பேசும் வார்த்தைகளே நோய்களை குணப்படுத்தும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஜெயசந்திரன் இன்று காலமானார்.

அடுத்த செய்தி