ஆப்நகரம்

சென்னை ராயபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, சென்னை ராயபுரம் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

TNN 14 Dec 2016, 1:17 pm
வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, சென்னை ராயபுரம் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Samayam Tamil chennai royapuram local people protests against civic body
சென்னை ராயபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்


வர்தா புயல் காரணமாக, சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் குடிநீர் மற்றும் மின்சாரம் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் கம்பங்கள் அடியோடு சாய்க்கப்பட்டுள்ளன. குடிநீர் குழாய்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், மாநகரின் பல்வேறு இடங்களிலும் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு நீர், மின்சாரம் இன்றி இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, வடசென்னையில் மக்களின் நிலை நெருக்கடியாக உள்ளது.

இந்நிலையில், உடனயாக, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி, திருவொற்றியூர், ராயபுரம், எர்ணாவூர், தண்டையார்பேட்டையில் பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்ற, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Chennai Royapuram: local people protests against civic body.

அடுத்த செய்தி