ஆப்நகரம்

பசுமைவழிச் சாலை திட்டம்: நிலம் கையகப்படுத்த ட்ரோன்கள் மூலம் வான்வழி ஆய்வு!

பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் ட்ரோன்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன.

Samayam Tamil 29 Jun 2018, 4:32 pm
சென்னை/சேலம்: பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் ட்ரோன்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன.
Samayam Tamil Drone Survey
ட்ரோன்கள் மூலம் வான்வழி ஆய்வு!


சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைவழிச் சாலை 277.3 கி.மீ தூரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலங்கள் கையகப்படுத்துவதற்கு, சேலம் மாவட்டத்தில் ட்ரோன்கள் மூலம் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டது.

இதுதொடர்பாக பேசிய ஆணைய அதிகாரிகள், மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் மூலம் ரூ.10,000 கோடி செலவில் பசுமைவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக கையகப்படுத்தும் நிலங்கள் குறித்து, ட்ரோன்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டுள்ளோம் என்றார்.

சேலத்தில் 20 கிராமங்களைச் சேர்ந்த 248 ஹெக்டேர் நிலம், 8 வழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த சாலைப் பணிகள் பல்வேறு கட்டங்களாக செய்து முடிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டியளித்த சேலம் ஆட்சியர் ரோகிணி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வான்வழி ஆய்வு, எல்லைகளை வரையறை செய்ய நடைபெறுகிறது. இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் கையகப்படுத்த வேண்டிய நிலத்தின் தெளிவான அளவீடு கிடைக்கப்பெறும்.

இந்த வான்வழி ஆய்வு நேற்று தொடங்கப்பட்டது. இந்த ஆய்வில் தோட்டக்கலை, வேளாண்மை, காடு மற்றும் வருவாய் துறையினர் கூட்டாக பங்கேற்கின்றனர். இதன்மூலம் மரங்கள், கிணறுகள், நீர் நிலைகள், கட்டமைப்புகள், வனப்பகுதி ஆகியவற்றை அளவீடு செய்து வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து தெரிய வரும் என்று கூறினார்.

Chennai-Salem greenfield expressway project NHAI uses drone for aerial survey of land to be acquired.

அடுத்த செய்தி