ஆப்நகரம்

சோழிங்கநல்லூர் மண் சரிவில் தொழிலாளி உயிரிழப்பு; தொடரும் மீட்பு பணி

சோழிங்கநல்லூரில் மண் சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

TNN 26 May 2017, 3:22 pm
சென்னை: சோழிங்கநல்லூரில் மண் சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil chennai sand slide made one labourer dead
சோழிங்கநல்லூர் மண் சரிவில் தொழிலாளி உயிரிழப்பு; தொடரும் மீட்பு பணி


சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் பள்ளத்தில் மண் சரிந்துள்ளது. அதில் குழி தோண்டிக் கொண்டிருந்த இருவர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் மூச்சுத்திணறி ஒருவர் உயிரிழந்தார். அவர் சுப்பிரமணி(53) என்று கண்டறிந்துள்ளனர்.

மற்றொருவர் உள்ளே சிக்கிக் கொண்டார். அவருக்கு உடல் அசைவுகள் இருப்பதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறும் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். துரைப்பாக்கம், சிறுசேரி, கிண்டி தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரங்களுக்கு அடியில் சிக்கிக் கொண்டுள்ளதால், அதனை அறுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 4 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன.

Chennai Sand slide made one labourer dead.

அடுத்த செய்தி