ஆப்நகரம்

கனமழை எதிரொலி: நான்கு மாவட்ட கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், நாகை மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 30 Oct 2017, 7:27 pm
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், நாகை மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil chennai school and colleges leave
கனமழை எதிரொலி: நான்கு மாவட்ட கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை


வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகை, தஞ்சை, திருவள்ளூா், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை முதலே அநேக பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் மழையின் தாக்கம் நாளை அதிகமாக இருக்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூாிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாகை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி