ஆப்நகரம்

தந்தையுடன் பைக்கில் பள்ளிக்குச் சென்ற சிறுமி பேருந்து மோதி உயிரிழப்பு

சென்னையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Jan 2019, 5:33 pm
சென்னையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
Samayam Tamil chennai schoolgirl crushed to death by mtc bus
தந்தையுடன் பைக்கில் பள்ளிக்குச் சென்ற சிறுமி பேருந்து மோதி உயிரிழப்பு


அனங்காப்புத்தூர் பகுதியை சேர்ந்த அஜ்மத் தன்னுடைய மகள் ஆலியா பேகத்தை (13) பள்ளியில் சென்று விடுவதற்காக கிரோம்பேட், நல்ல தம்பி சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.


அப்போது தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அஜ்மத் வேகமாக சென்றுள்ளார். சாலையில் எதிரோ வந்த வாகனத்தை பார்த்து, அஜ்மத் பிரேக் பிடித்துள்ளார். இதனால் வாகனத்தின் கட்டுப்பாட்டை அவர் இழந்துவிட்டார்.

இதில் சிறுமி ஆலியா சாலையில் விழுந்துவிட்டார். எதிர்பாராத விதமாக அதே வழியில் வந்த பேருந்து ஒன்று, சிறுமி மீது ஏறியது. இதில் சிறுமி ஆலியா பரிதாபமாக உயிரிழந்தார்.

அதை தொடர்ந்து, கிரோம்பேட் அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.

இந்த விபத்து சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர், நிலைமையை அறிந்து பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்திருந்தால் சிறுமி உயிருடன் இருந்திருப்பார் என சோகத்துடன் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி