ஆப்நகரம்

சென்னை: கொலை செய்ய வந்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பி ஓட்டம்!

சென்னையில் கொலை செய்ய வந்துவிட்டு பெண்னை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடியவரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 17 Mar 2018, 11:39 am
சென்னையில் கொலை செய்ய வந்துவிட்டு பெண்னை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடியவரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil chennai sexual abuse at the knife point
சென்னை: கொலை செய்ய வந்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பி ஓட்டம்!


சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கலைஞர் கருணாநிதி சாலை அருகே உள்ள நெடுஞ்சாலையில் பகுதியில் வசித்து வருபவர் நர்சத் அக்தர் (25). திரிபுராவைச் சேர்ந்த இவர், சென்னை வந்ததும் முதல் மனைவிக்கு தெரியாமல் நர்கிஷ் (20) என்ற பெண்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி திரிபுராவில் உள்ளார்.

இந்நிலையில், தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை அறிந்த முதல் மனைவி ஆத்திரமடைந்தார். பின்னர், நர்கிஷை கொலை செய்ய திட்டமிட்ட முதல் மனைவி, தனது நண்பர் ஷாகிர் உசைனிடம் 50,000 ரூபாய் கொடுத்து கொலை செய்துவிடுமாறு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து நர்சத் வீட்டுக்கு சென்ற ஷாகிர், வீட்டில் அவரது மனைவி மட்டும் நர்கிஷ் மட்டுமே தனியாக இருந்ததை தெரிந்து கொண்டு, கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார், காரப்பாக்கத்தில் பதுங்கியிருந்த ஷாகிர் உசைனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி