ஆப்நகரம்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சாஸ்திரி பவன் முற்றுகை: பெருகும் ஆதரவு

விவசாயிகளுக்கு ஆதரவாக சாஸ்திரி பவனை முற்றுகையிட்டவர்களை, காவல்துறையினர் கைது செய்தனர்.

TNN 11 Apr 2017, 3:51 pm
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக சாஸ்திரி பவனை முற்றுகையிட்டவர்களை, காவல்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil chennai shastri bhawan sieged by farmers supporters
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சாஸ்திரி பவன் முற்றுகை: பெருகும் ஆதரவு


டெல்லியில் தமிழக விவசாயிகள் 29வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து, அழைத்து சென்றனர். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் போதிய பருவமழை இன்றியும், அண்டை மாநிலங்களில் இருந்து நீர்வரத்து இன்மையாலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் கடன் ரத்து, வறட்சி நிவாரணம், காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.

Chennai Shastri Bhawan sieged by Farmers supporters.

அடுத்த செய்தி