ஆப்நகரம்

தீபாவளிக்கு முன் அதே இடத்தில் புதிய கட்டிடம்: சென்னை சில்க்ஸ் நிர்வாகம்

தீ விபத்துக்குள்ளான தியாகராய நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீபாவளிக்குள் மீண்டும் கட்டப்படும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் கூறியுள்ளார்.

TNN 3 Jun 2017, 3:40 am
சென்னை: தீ விபத்துக்குள்ளான தியாகராய நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீபாவளிக்குள் மீண்டும் கட்டப்படும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் கூறியுள்ளார்.
Samayam Tamil chennai silks to be built at the same place
தீபாவளிக்கு முன் அதே இடத்தில் புதிய கட்டிடம்: சென்னை சில்க்ஸ் நிர்வாகம்


சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை கட்டிடங்கள் தீ விபத்தினால் பெருத்த சேதம் அடைந்துள்ளன. அவற்றை இடிக்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் மதிக்கத்தக்க துணிகள் நாசமாகியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வைர நகைகள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளன. அவை பற்றி தகவல் கிடைக்கவில்லை.

விபத்தில் சிக்கிய கட்டிடம் தெரிந்தே விதிகளை மீறி கட்டப்படவில்லை. விதிமீறல் பற்றி எங்கள் கவனத்திற்கு வந்த போது, தீயணைப்பு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன என்று சென்னை சில்க்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்நிலையில், கட்டிடம் இடிக்கப்பட்ட பின், அதே இடத்தில், அரசு விதிமுறைகளை பின்பற்றி, புதிய சென்னை சில்க்ஸ் கட்டிடம் கட்டப்படும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி