ஆப்நகரம்

சென்னை மாநகர பேருந்தில், பட்டா கத்திகளுடன் பயணம்: மேலும் 4 பேர் கைது!

சென்னை மாநகர பேருந்தில், பட்டாகத்திகளுடன் ரகளையில் ஈடுபட்டதாக மேலும் 4 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 31 Aug 2018, 10:33 am
சென்னை மாநகர பேருந்தில், பட்டாகத்திகளுடன்ரகளையில் ஈடுபட்டதாக மேலும் 4 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil 0b647546fb676f68511f1b1a8f29e6b6


கல்லூரி மாணவர்கள் சிலர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் பயணம் செய்யும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று செங்குன்றம் பகுதியில் இருந்து, கரனோடை நோக்கி சென்ற (57 F) மாநகர பேருந்தில் பயணம் செய்த, மாநில கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டா கத்திகளுடன் பயணம் செய்தது சக பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.

மேலும் கத்திகளை சுழற்றியும், சாலைகளில் தீட்டியபடியும் மாணவர்கள் பயணித்ததால், பாதசாரிகள் உள்பட சாலையில் வாகனங்களில் சென்றவர்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, கத்திகளுடன் பயணம் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்க போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மாணவரை காவல்துறையினர்நேற்றுகைது செய்தனர்.

இந்நிலையில் இன்று மேலும் 4 மாணவர்களைவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் இவர்கள் மாநில கல்லூரியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி