ஆப்நகரம்

நிவர் புயல்... மாநிலத்திலேயே இங்குதான் அதிக மழை!

நிவர் புயல் காரணமாக சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று தொடர் மழை கொட்டித் தீர்த்தது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக தாம்பரத்தில் 31.4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

Samayam Tamil 26 Nov 2020, 10:21 am
நிவர் புயல் காரணமாக, வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்பே கணித்திருந்தது.
Samayam Tamil கோப்பு படம்
நிவர் புயல் மழை நிலவரம்


அதன்படியே சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று (நவம்பர் 25) முழுவதும் தொடர் மழை பெய்து கொண்டிருந்தது.

மாநிலத்திலேயே அதிகபட்சமான சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் 31.4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னை ஆட்சியர் அலுவலக பகுதியில் 27.8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

நேற்று செம்பரம்பாக்கம்... இன்று கடலூர்... சூறாவளியாய் சுழலும் முதல்வர்!

கடலூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்த சராசரியாக 28.3 சென்டிமீட்டர் மழையும். விழுப்புரத்திவ் 28 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரிக்கு அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக அந்த மாநிலத்தின் அண்டை மாவட்டங்களான கடலூர் மற்றும் விழுப்புரத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி