ஆப்நகரம்

லாரி மோதி மாணவிகள் உயிரிழப்பு: கல்லூரி நிர்வாகம் நிதியுதவி

சென்னை கிண்டி அருகே நேற்று தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியான மாணவிகளின் குடும்பத்துக்கு கல்லூரி நிர்வாகம் நிதியுதவி வழங்கியுள்ளது.

TNN 14 Oct 2016, 5:52 pm
சென்னை: சென்னை கிண்டி அருகே நேற்று தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியான மாணவிகளின் குடும்பத்துக்கு கல்லூரி நிர்வாகம் நிதியுதவி வழங்கியுள்ளது.
Samayam Tamil chennai tanker lorry hit financial aid announced for the deceased students family
லாரி மோதி மாணவிகள் உயிரிழப்பு: கல்லூரி நிர்வாகம் நிதியுதவி


கிண்டி அருகேயுள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சாலையோரம் சென்றுக் கொண்டிருந்தபோது, கிண்டியில் இருந்து சின்னமலை நோக்கி வந்த தண்ணீர் லாரி பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆஷாசுருதி, சித்ரா, காயத்ரி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

கல்லூரி மாணவிகளின் இந்த அகால மரணத்தை தாங்க முடியாமல் கடும் துயரத்தில் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு செல்லம்மாள் கல்லூரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவழி பாதையான அப்பகுதியில் கல்லூரி அருகே மாணவிகளின் வசதிக்கேற்ப பேருந்து நிறுத்தமும், சாலையை கடக்க ஏதுவாக சிக்னலும் அமைத்து தர வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி