ஆப்நகரம்

ஐடி ஊழியரின் மனைவி தற்கொலை

வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசிக்கும் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 4 Sep 2016, 10:18 am
சென்னை: வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசிக்கும் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil chennai techies wife kills herself
ஐடி ஊழியரின் மனைவி தற்கொலை


ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவாணி(21), கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக நாகார்ஜுனா என்பவரை திருமணம் செய்துக் கொண்டு வேளச்சேரியில் பத்மாவதி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நாகார்ஜுனா சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் ஸ்ரீவாணி வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் பி.சம்பந்தம், வீட்டின் கதவை தட்டியுள்ளார். உள்ளிருந்து எவ்வித சப்தமும் இல்லாததால் வேளச்சேரி போலீசாருக்கு சம்பந்தம் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஸ்ரீவாணி தூக்கில் தொங்கியுள்ளார். இது குறித்து நாகார்ஜுனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவரும் வீட்டிற்கு வந்தடைந்தார். ஸ்ரீவாணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவரவில்லை. இது குறித்து சம்பந்தம் அளித்த புகாரின் அடிப்படையில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவாணியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு ஸ்ரீவாணியின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி