ஆப்நகரம்

'போகப் போக வெப்பநிலை உயரும்'- சென்னை வானிலை குறித்து எச்சரிக்கை

சென்னையில் வரும் நாட்களில், மாதந்தோறும் 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

TOI Contributor 2 Mar 2016, 10:25 pm
சென்னையில் வரும் நாட்களில், மாதந்தோறும் 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil chennai temperature to go up south coastal tamil nadu to get rain
'போகப் போக வெப்பநிலை உயரும்'- சென்னை வானிலை குறித்து எச்சரிக்கை


இதுபற்றி வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், வரும் ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவநிலை சீசன் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, தெரிவித்தனர்.

மேலும், சென்னையில் மட்டும் கடந்த சில மாதங்களாக, மாதந்தோறும் சராசரியாக, 2 டிகிரி செல்சியல் என்ற அளவில் வெப்பநிலை அதிகரித்துவருவதாக, வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.


கடந்த ஜனவரியில் இருந்ததைவிட, பிப்ரவரி முடிவில், சென்னை வெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸாக உள்ளது. இதுவே, மார்ச் மாதத்தில், 32.5 டிகிரி செல்சியஸாக உயரக் கூடும். ஏப்ரலில், 34.3 டிகிரி செல்சியஸாகவும், மே மாதத்தில் 36.8 செல்சியஸாகவும், வெப்பநிலை அதிகரிக்கும்.

ஜூன் முடிவில், 36.9 டிகிரி செல்சியஸ் என்ற உச்ச வெப்பநிலை காணப்படும். இந்த ஆண்டின் அதிகபட்ச அனல் வீசும் மாதமாக, ஜூன் இருக்கும். அதன்பின் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என்பதால், வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என்றும் வானிலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி