ஆப்நகரம்

சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் லீவு: பாட்டில், பாட்டிலாக அள்ளிச் சென்ற மது பிரியர்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மதுபிரியர்கள் ஏராளமான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

TNN 9 Apr 2017, 10:33 am
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மதுபிரியர்கள் ஏராளமான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
Samayam Tamil chennai to be dry for 4 days tipplers stock up
சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் லீவு: பாட்டில், பாட்டிலாக அள்ளிச் சென்ற மது பிரியர்கள்


தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்றும், அவ்வாறு இருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அந்த செய்தி மது பிரியர்களுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான அமைந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூரில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி, அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று முதல் வரும் புதன்கிழமை வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. அதனால் மது பிரியர்கள் நேற்றே டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். தங்கள் கையில் இருந்த பணத்திற்கு மதுபாட்டில்களை வாங்கி, தேக்கி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி அதிகாரிகள், நேற்று மட்டும் ரூ.2 கோடி அதிகமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறினர். சென்னையில் உள்ள 250 டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஆகியவை கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 11,12 மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நாளான 15ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The district collectorate announced that all Tamil Nadu State Marketing Corporation Limited (Tasmac) outlets across the city and neighbouring Tiruvallur district would be shut until Wednesday.

அடுத்த செய்தி