பாஜக சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-க்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை எழும்புரில் நடைபெற்றுது. இதில் பாஜக-வின் முக்கிய தலைவர்கள் உட்பட அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் திமுக சார்பில் கனிமொழி எம்.பி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக-வின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், சிறிநீரக கோளாறு காரணமாக உடல் நலிவடைந்து டெல்லியில் கடந்த 16ம் தேதி காலமானார். அவரது உடல் ராணுவ மரியாதை உடன் தகனம் செய்யப்பட்டது. பின் அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள நதிகளில் கரைக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக சார்பில், சென்னை எழும்புரில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-க்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இதில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், வாஜ்பாய் நாட்டில் உள்ள எல்லா மொழிகளும் சமமான நிலையில் இருக்க வேண்டும் என நினைத்தார். நான் அவரை ஒரு ஒழுக்கமான தலைவராகவே பார்த்தேன் என்று கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், 1998ல் அணுகுண்டு சோதனை நடத்தி வாஜ்பாய் உலகநாடுகளை வியக்க வைத்தார். அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தவர் வாஜ்பாய். உறவுக்கு கைகொடுப்பதில் வாஜ்பாய்க்கு நிகர் யாரும் இல்லை என்று தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி, இந்தியாவில் காங்கிரஸ் இல்லாத கட்சியிலிருந்து வந்து முதல் பிரதமானவர் வாஜ்பாய் என்றார். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க உறுதி அளித்தவர். அனைவரையும் மதித்து நடக்கூடியவர் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக -வின் மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, திமுக கருணாநிதியை இழந்து தவிப்பது போல பாஜக வாஜ்பாயை இழந்து தவிப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர், கூட்டணியில் இல்லாவிட்டாலும் கருணாநிதி, வாஜ்பாய் நண்பர்களாக இருந்தனர். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று வாஜ்பாய் முன்னெடுத்த நடவடிக்கை, பொக்ரான் அணுகுண்டு சோதனையை விட பெரியது. கவிமனம் இருந்ததினால் தான் அனைவரையும் வாஜ்பாயால் நேசிக்க முடிந்தது என்று பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் புகழை என்றும் நினைவில் கூற வேண்டும். திட்டங்களை தீட்டுவது மட்டுமல்ல அதை செயல்படுத்தக்கூடியவர் வாஜ்பாய் என்று தெரிவித்தார்.
சென்னை எழும்புரில் நடைபெற்ற மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழஞ்சலி கூட்டத்தில் மாநில மற்றும் தேசியளவிலான தலைவர்கள் பலர் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி தெரிவித்தனர். தமிழகத்தை தொடர்ந்து மேலும் பல மாநிலங்களில் வாஜ்பாய்-க்கு புகழஞ்சலி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக-வின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், சிறிநீரக கோளாறு காரணமாக உடல் நலிவடைந்து டெல்லியில் கடந்த 16ம் தேதி காலமானார். அவரது உடல் ராணுவ மரியாதை உடன் தகனம் செய்யப்பட்டது. பின் அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள நதிகளில் கரைக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக சார்பில், சென்னை எழும்புரில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-க்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இதில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், வாஜ்பாய் நாட்டில் உள்ள எல்லா மொழிகளும் சமமான நிலையில் இருக்க வேண்டும் என நினைத்தார். நான் அவரை ஒரு ஒழுக்கமான தலைவராகவே பார்த்தேன் என்று கூறினார்.
அவரை தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், 1998ல் அணுகுண்டு சோதனை நடத்தி வாஜ்பாய் உலகநாடுகளை வியக்க வைத்தார். அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தவர் வாஜ்பாய். உறவுக்கு கைகொடுப்பதில் வாஜ்பாய்க்கு நிகர் யாரும் இல்லை என்று தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி, இந்தியாவில் காங்கிரஸ் இல்லாத கட்சியிலிருந்து வந்து முதல் பிரதமானவர் வாஜ்பாய் என்றார். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க உறுதி அளித்தவர். அனைவரையும் மதித்து நடக்கூடியவர் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக -வின் மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, திமுக கருணாநிதியை இழந்து தவிப்பது போல பாஜக வாஜ்பாயை இழந்து தவிப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர், கூட்டணியில் இல்லாவிட்டாலும் கருணாநிதி, வாஜ்பாய் நண்பர்களாக இருந்தனர். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று வாஜ்பாய் முன்னெடுத்த நடவடிக்கை, பொக்ரான் அணுகுண்டு சோதனையை விட பெரியது. கவிமனம் இருந்ததினால் தான் அனைவரையும் வாஜ்பாயால் நேசிக்க முடிந்தது என்று பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் புகழை என்றும் நினைவில் கூற வேண்டும். திட்டங்களை தீட்டுவது மட்டுமல்ல அதை செயல்படுத்தக்கூடியவர் வாஜ்பாய் என்று தெரிவித்தார்.
சென்னை எழும்புரில் நடைபெற்ற மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழஞ்சலி கூட்டத்தில் மாநில மற்றும் தேசியளவிலான தலைவர்கள் பலர் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி தெரிவித்தனர். தமிழகத்தை தொடர்ந்து மேலும் பல மாநிலங்களில் வாஜ்பாய்-க்கு புகழஞ்சலி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.