ஆப்நகரம்

பருவ மழையினால் சென்னை கடுமையாக பாதிக்கப்படும்; பகீர் கிளப்பும் ஈபிஎஸ்

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Samayam Tamil 6 Oct 2022, 8:25 pm
சேலம் எடப்பாடி நகராட்சி 12 வது வார்டு திமுக உறுப்பினர் ரவி தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது; அதிமுகவிற்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு கட்சியில் 100 சதவீதம் இடமில்லை. அதிமுகவை முடக்க வேண்டும் என நினைப்பவர்கள் காற்றில் கரைந்து போவார்கள் என கூறினார்.
Samayam Tamil eps


மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் திமுகவின் மூத்த அமைச்சர் பொதுகூட்டத்தில் அவதூறாக பேசுவது வருத்தத்திற்குரியது. என்றும் கூறினார். தொடர்ந்து பேசியவர், பல திமுக அமைச்சர்கள் மக்களை அவதூறாக பேசுவது கண்டிக்கத்தக்கது நிர்வாக திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு வருகிறார்.

திமுக அரசின் திட்டமில்லாத நடவடிக்கையால் வரும் பருவ மழையினால் சென்னை மாநகரம் மிகவும் பாதிக்கப்படும். குடிமராமத்து திட்ட பணிக்காக திமுக அரசு எந்த ஒரு நிதியையும் திமுக அரசு ஒதுக்கவில்லை. நீர் பற்றாக்குறையான தமிழகத்தில் ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக்காமல் சேமிப்பது நமது கடமை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வரே தமிழன் கிடையாது - தமிழிசை சவுந்தரராஜன் வீசிய யார்க்கர்.!

மேலும், அரசியல் பார்க்காமல் மக்கள் நலனுக்காக குடிமராமத்து திட்ட பணியை தொடர வேண்டும் என்றும் மக்கள் நலனுக்காக அதிமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை, திமுக அரசு தற்போது முடக்கி இருப்பதாகவும் அவர் குற்றசாட்டு வைத்தார்.

அடுத்த செய்தி