ஆப்நகரம்

சென்னை அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை- 6 பேர் கைது

சென்னையை அடுத்த கானத்தூரில் கூலித்தொழிலாளியின் மனைவியை கத்திமுனையில் மிரட்டி சுமார் ஆறு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Mar 2019, 4:01 pm
பொள்ளாச்சி , கோவை பாலியல் வழக்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் சென்னையிலும் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
Samayam Tamil பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது


திருச்சியைச் சேர்ந்த கணவன் மனைவி ஆகிய இருவர் கூலித்தொழில் செய்வதற்காக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளனர். இருவரும் சென்னையை அடுத்த கானத்தூரில் கடந்த இரண்டு வார காலமாக கூலி வேலைப் பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் கானத்தூர் பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில் கனவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். இதை பார்த்த சுமார் ஆறு மர்ம நபர்கள் கணவனை கத்தியால் வெட்டி விட்டு 22 வயது மதிக்கத்தக்க மனைவியை கத்திமுனையில் மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே பொள்ளாச்சி, கோவை ஆகிய பகுதிகளில் நடந்த பாலியல் சம்பவ வழக்குகள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 22 வயதான பெண்ணை சுமார் 6 நபர்கள் மிரட்டி பாலியல் பாலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கானத்தூர் காவல்துறையினருக்கு தெரிய வர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அடுத்த செய்தி