ஆப்நகரம்

சென்னையில், தொடர் மழை: வீட்டின் கூரை இடிந்து பெண் ஒருவர் பலி!

சென்னையில், தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலை மீது வீட்டுக்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Samayam Tamil 20 Sep 2019, 8:37 am
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியபடி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக தலைநகர் சென்னையில், கடந்த 2 நாட்களாகக் கொட்டித் தீர்த்த மழை இன்றும் தொடர்கிறது. இன்னும் 3 நாட்களுக்குச் சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், சென்னை பிராட்வே பகுதியில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 201909200306119564_The-roof-of-the-house-collapses-and-the-woman-kills_SECVPF


சென்னை மண்ணடி பகுதியில் வசித்து வருபவர் ஜெரினாபானு(45). இவர் தனது தாய் வசந்தா மற்றும் 2 குழ்நதகளுடன் வசித்து வந்தார். இவர் நேற்று அதிகாலை வீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் நேற்று அதிகாலை 1 மணி முதல் மழைக் கொட்டியது.

இந்த சூழலில் ஜெரினாபானுவின் வீட்டின் கூரை இடிந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தால், வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த ஜெரினாபானுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஜெரினாபானுவின் அருகில் தான் அவரது 2 குழந்தைகள் மற்றும் வசந்தாவும் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். நல்ல வேலையாக வசந்தா மற்றும் 2 குழந்தைகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

வீடு இடிந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், சம்பவம் குறித்து, எஸ்பிளனேடு காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த எஸ்பிளனேடு காவல்துறையினர், ஜெரினாபானுவின் உடலை மீட்டு, அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள எள்பிளனேடு காவல்துறை, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழைக்காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடர்ந்து செய்திகளாக வந்து கொண்டுதான் இருக்கிறது. பொது மக்கள் தங்கள் உறைவிடம், செல்லும் இடங்கள் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும். தொடர் மழைக் காரணமாக, பழைய கட்டிடங்கள் மற்றும் பாதிப்படைந்த கட்டிடங்களில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இதுகுறித்து பொது மக்களிடம் தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி