ஆப்நகரம்

கோழி, முட்டை விலை தடாலடி சரிவு; தமிழகத்தில் ஆட்டம் காட்டும் பறவைக் காய்ச்சல்!

பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக கோழி மற்றும் முட்டை விலை எந்தளவிற்கு சரிந்துள்ளது என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 8 Jan 2021, 12:24 pm
இந்தியாவில் கோழிகள் மற்றும் முட்டை விற்பனை 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டும் மிகப்பெரிய தொழிலாக இருந்து வருகிறது. சமீபத்தில் ஹிமாச்சல் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல், இன்ப்ளூயன்சா ஆகிய நோய்த்தொற்று பரவல் கோழிகள், வாத்துகள் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் வாத்துகள் உயிரிழந்துள்ளன.
Samayam Tamil chicken price in namakkal


இதனால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவை கொண்டு வரப்படும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இன்னும் பரவவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.

இந்துக்களுக்கு மட்டும் தான் பொங்கல் பரிசு; அர்ஜுன் சம்பத் புதிய சர்ச்சை!
அதேசமயம் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்று வருகின்றன. இருப்பினும் பறவைக் காய்ச்சல் அச்சம் பல்வேறு விதங்களில் வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. உதாரணமாக நாமக்கல் கோழி பண்ணைகளில் கறிக்கோழி விலை 14 ரூபாய் குறைந்து 78 ரூபாயாக விற்கப்படும் நிலைக்கு வந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கறிக்கோழி ஒரு கிலோ 92 ரூபாய், முட்டைக்கோழி 52 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேரளாவிற்கு கோழிகள் ஏற்றுமதி செய்யப்படுவது குறைந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு 4.85 ரூபாயாக விற்கப்படுகிறது.

சோசியல் மீடியாவில் இணைந்த பாக்யராஜ்!
கடந்த ஒரு மாதமாக முட்டை விற்பனை நன்றாக இருந்தது. கடந்த 4ஆம் தேதி அதிகபட்சமாக 5.10 ரூபாய் அளவிற்கு சென்றது. சென்னையைப் பொறுத்தவரை கறிக்கோழி வாங்கும் நபர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 சதவீத அளவிற்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி