2020ஆம் ஆண்டின் தொடக்கமே உலக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட்19 எனப்படும் கொரோனா வைரஸ், தற்போது உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. மனிதர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தகைய கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு வதந்திகளும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவி வருகின்றன.
அதிலும் கோழி, ஆடு, மாடு, மீன் போன்றவற்றை சாப்பிட்டால் கொரோனா பரவுகிறது என்ற தவறான தகவல் பரவி கொண்டிருக்கிறது. ஆனால் மாமிசம் சாப்பிடுவதால் கொரோனா பரவுகிறது என இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இது வெறும் வதந்தி மட்டுமே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவொரு சந்தேகமாக இருந்தாலும் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வதந்தி காரணமாக பிராய்லர் கோழிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
தத்தளிக்கும் 721 தமிழக மீனவர்கள்; ஈரானில் தொடர்ந்து படகில் வசிக்கும் சோகம்!
குறிப்பாக அசைவ உணவகங்களில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரியாணிக்கு புகழ்பெற்ற இடங்களாக ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்டவை திகழ்கின்றன. இங்கெல்லாம் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக சிக்கன், மட்டன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் விலை ரூ.160 என விற்கப்பட்டது. இந்த சூழலில் நேற்று ஆம்பூரில் ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் ரூ.30க்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதே நிலை தமிழகம் முழுவதும் நிலவுவதாக கூறப்படுகிறது.
பிராய்லர் கோழிகளை பொறுத்தவரை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது. எனவே தான் உடனே விற்பனை செய்தாக வேண்டிய சூழலில் வியாபாரிகள் இருக்கின்றனர்.
இத்தகைய கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு வதந்திகளும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவி வருகின்றன.
அதிலும் கோழி, ஆடு, மாடு, மீன் போன்றவற்றை சாப்பிட்டால் கொரோனா பரவுகிறது என்ற தவறான தகவல் பரவி கொண்டிருக்கிறது. ஆனால் மாமிசம் சாப்பிடுவதால் கொரோனா பரவுகிறது என இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இது வெறும் வதந்தி மட்டுமே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவொரு சந்தேகமாக இருந்தாலும் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வதந்தி காரணமாக பிராய்லர் கோழிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
தத்தளிக்கும் 721 தமிழக மீனவர்கள்; ஈரானில் தொடர்ந்து படகில் வசிக்கும் சோகம்!
குறிப்பாக அசைவ உணவகங்களில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரியாணிக்கு புகழ்பெற்ற இடங்களாக ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்டவை திகழ்கின்றன. இங்கெல்லாம் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக சிக்கன், மட்டன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் விலை ரூ.160 என விற்கப்பட்டது. இந்த சூழலில் நேற்று ஆம்பூரில் ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் ரூ.30க்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதே நிலை தமிழகம் முழுவதும் நிலவுவதாக கூறப்படுகிறது.
பிராய்லர் கோழிகளை பொறுத்தவரை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது. எனவே தான் உடனே விற்பனை செய்தாக வேண்டிய சூழலில் வியாபாரிகள் இருக்கின்றனர்.