ஆப்நகரம்

சென்னை உயர் நீதிமன்றம்: 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவிப் பிரமாணம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த ஐந்து பேர் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றனர்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 6 Mar 2023, 1:22 pm
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த ஐந்து பேருக்கு நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Samayam Tamil judges


வழக்கறிஞர்களாக இருந்துவந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

கூடுதல் நீதிபதிகள்!

அதன்படி 2021ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி எஸ். ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோருக்கும், அக்டோபர் 28ஆம் தேதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தும் கூடுதல் நீதிபதிகளாக அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னையில் 500 தனியார் பேருந்துகள் ஏன்? அமைச்சர் அளித்த விளக்கம்!
இந்நிலையில் உச்ச நீதிமன்ற பரிந்துரையை ஏற்று, கூடுதல் நீதிபதிளாக பதவிவகித்து வரும் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

டெல்லிக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி: அண்ணாமலைக்கு பிரஷர் - இனிமேல் இப்படி தானா?

நிரந்தர நீதிபதிகள்!

அதன்படி 5 கூடுதல் நீதிபதிகள் எஸ். ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி