ஆப்நகரம்

AIADMK Rajendran Death:சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Feb 2019, 12:57 pm
சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil MP


விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர் அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர், இன்று காலை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, திண்டிவனம் அருகே வந்த போது கார் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பாலியாகியுள்ளார்.

இதையடுத்து, அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்ற அமைச்சர் சிவி சண்முகம் ராஜேந்திரன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக எம்பி ராஜேந்திரன் குடும்பத்தாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ராஜேந்திரனின் இழப்பு அதிமுகவிற்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும்.

ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கழக உடன் பிறப்புகளுக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜேந்திரன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நடக்கயிருந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி