ஆப்நகரம்

முத்தரையர் மாநாட்டில் எடப்பாடி: எல்லாம் அரசியல் கணக்கு தான்!

மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் முத்தரையர் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.

Samayam Tamil 31 Jan 2021, 12:00 pm
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கு பின்னாலும் ஏன் செய்யாமல் விடும் ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாலும் அரசியல் இருந்து கொண்டே உள்ளது. அந்தவகையில் முத்தரையர் சமூக மாநாட்டில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி மதுரை வருவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Samayam Tamil edappadi palanisamy


தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்றச் சங்கம் சார்பில் வலையர் வாழ்வுரிமை மாநாடு இன்று (ஜனவரி 31) மாலை 4 மணியளவில் மதுரை ஒத்தக்கடை கண்ணப்பர் திடலில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி 1 மணியளிவில் விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வருகிறார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதலில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது உடனடியாக ஒகே சொல்லவில்லை என்று கூறுகின்றனர். இதனால் விழாக் குழுவினர் பாஜக தலைவர் எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர் கலந்துகொள்வதாக கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இனிமேல் இது ஃப்ரீயாம்!
இதைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெற்றியடையப் போவது உங்கள் மாநாடு மட்டுமல்ல ; அரசியல் அங்கீகாரமும் உரிமைகளும்தான்! உங்கள் உரிமைகள் வெற்றியடைய பிரதம மோடிஜியும், அமித்ஷாவும், ஜே.பி. நட்டாவும் துணை நிற்பார்கள். மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என பதிவிட்டார்.

முத்தரையர் சங்க மாநாட்டில் பாஜக தலைவர் கலந்துகொள்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் முதல்வர் சார்பில் முத்தரையர் சங்கத்தை தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி வருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர். பின்னர் முதல்வர் பெயர் போட்டு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.

பாஜகவை பொறுத்தவரை தமிழகத்தில் காலூண்ற முக்கிய ஆயுதமாக சாதி சங்கங்களை பயன்படுத்துகிறது. அந்த வகையில் முததரையர் சங்கத்தையும் தங்கள் பக்கம் வளைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் முத்தரைய சமூக மக்களின் வாக்குகள் அதிமுகவுக்கு வருவதாக கூறப்படும் நிலையில் அதை பாஜகவுக்கு பறிகொடுத்துவிடக் கூடாது என்பதாலே எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அரசியல் திருப்பங்கள் இன்று: ஒரே நாளில் இத்தனையா, தாங்குமா அதிமுக?

அதிமுகவுடன் கூட்டணி உறுதி என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேற்று மதுரையில் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இன்று மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர் எல்.முருகனும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

அடுத்த செய்தி