ஆப்நகரம்

புயலில் ஸ்கோர் செய்கிறாரா முதல்வர்? வேட்டியை மடித்து கட்டி இறங்கும் எடப்பாடி

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்கிறார்.

Samayam Tamil 30 Nov 2020, 8:06 am
நிவர் புயல் மரக்கானத்துக்கு அருகில் கரையைக் கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதமடைந்தன, கால்நடைகள் உயிரிழந்தன. ஒரு சில இடங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது.
Samayam Tamil edappadi palanisamy


கஜா புயல் அளவுக்கு வீரியத்துடன் கிளம்பினாலும் நிவர் புயல் அந்த அளவுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை. கஜா புயல் சமயத்தில் மீட்பு, நிவாரணப் பணிகளில் அதிமுக அரசு கோட்டைவிட்டது. இதனால் மக்கள் அரசின் மீது அதிருப்தியடைந்தனர். மக்களவைத் தேர்தலின் போது இந்த அதிருப்தி வெளிப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நிவர் புயல் வாக்கு வங்கியை அடித்துச் சென்றுவிடுமோ என்ற பயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால் நிவர் புயல் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தாமல் மழைப் பொழிவைக் கொடுத்தது ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இது அரசுக்கும் பெரிய ஆறுதலாக அமைந்தது.

பள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்!

நிவர் புயலைப் பயன்படுத்தி ஸ்கோர் செய்யும் விதமாக முதல்வர் கடலூர் விசிட் அடித்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பு பெற்றது. ஒவ்வொரு மழை, புயலின் போது கடலூர் மாவட்டம் தான் அதிக பாதிப்புகளை சந்தித்தாலும் ஆட்சியாளர்கள் சென்னையைவிட்டு பெரியளவில் வெளியே வரவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விசிட் அதை அடித்து நொறுக்கியது.

அதிமுக சொன்னது, அமித் ஷா சொன்னாரா? ரஜினியை நம்பும் பாஜக!

தற்போது அவர் சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளையும் ஆய்வு செய்கிறார். பள்ளிக்கரணை, முட்டுக்காடு, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை பகல் 12 மணிக்கு முதல்வர் பார்வையிடுகிறார். அதே போல் ஒக்கியம், துரைபாக்கம், நூக்கம்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் முதல்வர் ஆய்வு செய்கிறார்.

அடுத்த செய்தி