ஆப்நகரம்

டெல்லியில் போராடும் விவசாயிகளை 41வது நாளில் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

டெல்லியில் போராடும் விவசாயிகளை 41வது நாளில் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

TOI Contributor 23 Apr 2017, 8:53 am
தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (23.04.17) சந்தித்தார்.
Samayam Tamil chief minister edappadi palanisamy met delhi tn farmers
டெல்லியில் போராடும் விவசாயிகளை 41வது நாளில் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!


தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி டெல்லியில் போராட்டம் தொடங்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உரிய விலை கொடுத்து விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். பல்வேறு போராட்ட முறைகளை கையாண்ட விவசாயிகள் நிர்வாண போராட்டம் கூட நடத்தினர்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் விவசாயிகளை சந்தித்தும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இந்நிலையில் 41 நாளான இன்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்து பேசினார். விவசாயிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், அய்யாக்கண்ணு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வலியுறுத்துவேன் என்று உறுதி அளித்துள்ளார்.

அடுத்த செய்தி