ஆப்நகரம்

மகளிர் உரிமைத் தொகை: ஒரு கோடி பேருக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை!

ஒரு கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 27 Mar 2023, 2:10 pm
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil family women heads cash


பரிசோதனை முயற்சியில் சில நாடுகளில் குறிப்பிட்ட சில பிரிவினர்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு நல்ல வரவேற்பும் பலனும் கிடைத்துள்ளது. வறுமையை ஒழிக்க உதவி செய்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அப்படியானால் இந்த திட்டத்தால் தமிழ்நாடு எவ்வளவு பலன் அடையும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

யார் யாருக்கு வழங்குவார்கள் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் குடும்ப செலவில் பெரிய பலனளிக்கும் என நினைக்கும் அனைவருக்கும் இந்த திட்டம் கிடைக்கப் பெறும். அனைவருக்கும் வீடு என்றால் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்பது தான் பொருள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்றால், வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதுதான் பொருள்.
அரசுப் பணிகளில் அவுட் சோர்சிங் முறை: மீண்டும் சொன்ன பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்அந்த வகையில் அனைத்து மகளிர் என்றால், 1000 ரூபாய் யாருக்கு அதிகம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இந்த திட்டம் வழங்கப்படும்.

நடைபாதை கடைகளை நடத்துவோர், மீனவ பெண்கள், சிறு கடைகளை நடத்துவோர், வீட்டு வேலை செய்வோர் என தங்கள் உடல் உழைப்பை செலுத்தும் ஒரு கோடி மகளிருக்கு இந்த திட்டம் வழங்கப்படும்.
மக்களவைத் தேர்தல் 2024: அண்ணாமலை போடும் தப்பு கணக்கு: இதை நம்பினால் கரை சேர முடியாது!
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி