ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பில் திடீர் மாற்றம்: ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!

நர்சரி பள்ளிகள் திறப்பு, மக்கள் கல்வி திட்டம், பாடநூல் விநியோகம் ஆகியவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

Samayam Tamil 18 Oct 2021, 6:56 am
தமிழகத்தில் நர்சரி குழந்தைகளிலிருந்து 1 - 8ஆம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட உள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
Samayam Tamil tn schools reopen change


கொரோனா பரவல் காரணமாக, ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்த முறை காரணமாக சில மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு 200 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைக்க மக்கள் பள்ளி என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம், அன்றாடம் ஒன்றரை மணி நேரம் மாணவர்களுக்கு வீடு தேடி சென்று பாடம் கற்றுக் கொடுக்கப்படும்.

3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு உடனடி தேர்வு: ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!

பள்ளிகள் திறப்பிற்கான பணிகள் ஒரு பக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை சனிக்கிழமை வெளியிட்டார்.

“நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதலமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்த கட்டாயம் பற்றியும், அவர்களை வரவழைப்பது குறித்தும் தான் விவாதித்தோம். ஆனால் அறிவிப்பில் நர்சரி, கிண்டர்கார்டன் பள்ளிகளும் இணைந்து வந்துள்ளது” என்று கூறினார்.
தியாகத் தலைவி எப்படி புரட்சித் தாயாக மாறினார்? மாற்றத்தின் பின்னணி காரணம்!
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மழலையா் பள்ளிகளைத் திறப்பது பற்றியும், மக்கள் பள்ளித் திட்டம் பற்றியும் திங்கள்கிழமை முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தாா்.

இன்று தலைமைச் செயலகத்தில் மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

அதேபோல் 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் மற்றும் முதல் பருவத் தேர்வுகள் முடிந்து விடுமுறையும் நிறைவடைந்துள்ளன. இன்று முதல் இரண்டாம் பருவத்திற்கான பாடங்களை நடத்த வேண்டும். இவற்றை நடத்தி முடிக்க இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே அவகாசம் இருக்கிறது. இந்நிலையில் இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் விநியோகத்தை பள்ளிக் கல்வித்துறை இன்னும் தொடங்காமல் தாமதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்தும் ஆலோசனை நடைபெறும் என்கிறார்கள்.

அடுத்த செய்தி