ஆப்நகரம்

தைரியமா இருங்க, பாதுகாப்பா இருங்க: மாணவர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்.

Samayam Tamil 26 Feb 2022, 2:50 pm
உக்ரைன் நாட்டில் போர்ச்சூழலில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களை நேரடியாக காணொலி அழைப்பு வாயிலாகத் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
Samayam Tamil mk stalin


கடந்த சில நாட்களாக ரஷ்யா நாட்டு ராணுவம் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் உக்ரைன் நாட்டில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

உக்ரைன் நாட்டில் உயர்கல்வி பயில்வதற்காகச் சென்று தங்கியுள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் அங்கு நிலவிவரும் போர்ச் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு உடனடியாக தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களும் தமிழ்நாட்டில் வாழும் அவர்களின் பெற்றோர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாணவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், அவ்வாறு உடனடியாக அழைத்து வருவதற்கான பயணச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடவை தப்பாது: சசிகலாவுக்காக வழியை ஆயத்தப்படுத்தும் நிர்வாகிகள்!

மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்பு கொள்வதற்கு உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறையில் இதற்கென தனி குழு ஏற்படுத்தப்பட்டு, வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையர் தலைமையில் குழுவின் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் தற்பொழுது தங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மௌனி சுஜிதா, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டனி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நவநீத ஸ்ரீராம் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் காணொலி அழைப்பு வாயிலாகத் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? சூப்பர் அறிவிப்பு!
மேலும், அவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது என்றும், தாங்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

அடுத்த செய்தி