ஆப்நகரம்

விருந்தோம்பலும், சுயமரியாதையும்: மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Aug 2022, 11:00 am
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக தமிழ்நாடு அரசை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mk stalin modi chess


மாமல்லபுரத்தில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

12 நாள்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 9) கோலாகலமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் பதக்கங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
அதிமுகவுக்கு நிதிஷ்குமார் சொல்லும் பாடம்: ஆளுமைன்னா என்ன தெரியுமா?
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்தப் போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்” என தமிழில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டில் முதல்வர் ஸ்டாலினையும் டேக் செய்தார்.

இதற்கு பதிலளித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “உங்களின் பாரட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரு குணங்கள்.
வாழ்த்து சொன்ன ஸ்டாலின்: அண்ணனுக்கு நன்றி சொன்ன தேஜஸ்வி
உங்களின் நிலையான ஆதரவை எதிர்பார்ப்பதுடன், இதுபோன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழகத்திற்கு வாய்ப்பளிக்க கோரிக்கை வைக்கிறேன். யாதும் ஊரே, யாவரும் கேளிர்” எனப் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி