ஆப்நகரம்

MK Stalin: ஜல்லிக்கட்டு தீர்ப்பு... வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது.. முதல்வர் ஸ்டாலின்!

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 18 May 2023, 3:13 pm
Samayam Tamil MK Stalin

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, வேலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக் வலியுறுத்தி பீட்டா உள்ளிட்ட விலங்ககுகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை மெரினா, மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்போதைய அதிமுக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வழிவகை செய்தது.
Kaavya Arivumani: அல்டிமேட்... சீரியல் நடிகை காவியா அறிவுமணியின் வேற லெவல் போட்டோஸ்!
இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த டிசம்பர் மாதம் விசாரணையை நிறைவு செய்தது.

மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின்
அவசரச்சட்டம் செல்லும் என நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
பள்ளிக் கல்வித்துறையின் சூப்பர் அறிவிப்பு... ஹேப்பி மோடில் ஆசிரியர்கள்!
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்தில் எந்த தவறும் இ,லை என்றும் தமிழ்நாடு அரசின் சட்டம் திருப்தியளிக்கிறது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வ வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியும் ஒரு முதல்வரா... நகரின் வளர்ச்சிக்காக அப்பாவின் சமாதியை அகற்றிய நவீன் பட்நாயக்!
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது என்றும் தனது டிவிட்டில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை வருவதாகவும், வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடலாம் என்றும் ஸ்டாலின் தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி