ஆப்நகரம்

அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு நடத்தும் ஆலோசனை: காரணம் இதுதான்!

பிரதமர் மோடி, குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகையையொட்டி தலைமைச்செயலாளர் இறையன்பு முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Samayam Tamil 16 May 2022, 2:24 pm
பிரதமர், துணைக் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
Samayam Tamil irai anbu ias


தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக, பிரதமர் மோடி மே 26ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்களையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ரூ. 12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா யாரை குரங்கு என சொன்னார்? இது தான் அடுத்த திட்டம்!

அதேபோல் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக ஓமந்தூரார் தோட்டத்தில் அவரது சிலையை திமுக அமைத்து வருகிறது. இந்த சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வருகிற 28ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

அரசியல் ரீதியாக திமுக பாஜகவை கடுமையாக விமர்சிக்கிறது. மாநில உரிமைகள், மாநிலத்துக்கு வர வேண்டிய நிதி ஆகியவை குறித்து ஒன்றிய பாஜக அரசையும் அவ்வப்போது விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி, வெங்கையா நாயுடு ஆகியோர் அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வருவது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் கொடுக்கும் சர்ப்ரைஸ்: இது சரியான முடிவா?
குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதில் திமுகவின் ஆதரவு வேண்டும் என பாஜக நினைப்பதாக டெல்லி வட்டாரத்தினர் கூறுகின்றனர். நீட் தேர்வு, எழுவர் விடுதலை, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி உள்ளிட்டவற்றில் பாஜக அரசின் ஆதரவை தமிழ்நாடு அரசு எதிர்பார்க்கிறதாம். எனவே இரு தரப்பும் சில சமரசங்களுக்கு தயார் என்று சொல்கிறார்கள்.

பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் வருகையை ஒட்டி என்னென்ன முன்னேற்பாடுகளை மேற்கொள்வது, பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து டிஜிபி சைலேந்திர பாபு, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகின்றார்.

அடுத்த செய்தி