ஆப்நகரம்

கலெக்டர்களை ஆலோசனைக்கு அழைத்த தலைமைச் செயலாளர்!

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

Samayam Tamil 26 Sep 2020, 11:43 am
கொரோனா பொது முடக்கம் விதிக்கப்பட்டு முழுதாக ஆறு மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிப்பதும், தடைகள் விதிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil k shanmugam


ஒவ்வொரு மாத இறுதியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். கடந்த மாதம் முதல்வர் ஆலோசனை நடத்துவதற்கு முன்னர் தலைமைச் செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்தவகையில் இன்னும் சில நாள்களில் தற்போதுள்ள பொதுமுடக்கம் நிறைவடையவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் சண்முகம் இந்த ஆலோசனையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா அபராதத் தொகையை எப்படி செலுத்துவார்?

இ பாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி ஆகியவை கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் கொரோனா பாதிப்பு மேலும் வேகமாக அதிகரித்துவிடுமோ என்ற அச்சமும் நிலவின. ஆனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பெரியளவில் ஏற்றம் ஏறபடவில்லை. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து ஒரே அளவில் உயர்ந்து வருகிறது.

அரச மரியாதையுடன் நல்லடக்கம்... சிவாஜிக்கு பிறகு எஸ்.பி.பி. தான்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி