ஆப்நகரம்

தமிழகத்தில் வெப்பஅலை தாக்கம் : தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை மேற்கொண்டார்.

TNN 22 Apr 2017, 8:43 am
சென்னை: தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை மேற்கொண்டார்.
Samayam Tamil chief secretary to government held a review meeting in the secretariat on heat wave action plan with heads of all departments
தமிழகத்தில் வெப்பஅலை தாக்கம் : தலைமை செயலாளர் ஆலோசனை


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , " தமிழகத்தில் வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்துவியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தலைமைசெயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை மூலம் 21-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறித்தும், உயர் கல்வி நிறுவனங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் வெப்ப அலையினால் பாதிக்கப்படாமல்இருப்பதற்காக போக்துவரத்துத் துறை மூலம்சிறப்பு பேருந்து வசதிகள் மேற்கொள்ள ஆவணசெய்யும்படி அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறே மருத்துவத் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது குறித்தும், வெப்ப அலையினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், கால்நடைத் துறை சார்பாக கால் நடைகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் மருந்துகள் தயார்நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

தொழிலாளர் நலத்துறை மூலமாக கட்டுமானப் பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய அறிவுரைகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து தக்கநடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மூலம் பொதுமக்கள் பெருமளவில்கூடும் இடங்களில் நிழல் பந்தல்கள் மற்றும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கவும்அறிவுறுத்தப்பட்டது.


மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்புத் திட்டப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் நிழல் பந்தல் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதனை ஊரக வளர்ச்சித் துறை உரிய முறையில் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் வெப்ப அலையின் தாக்கத்தினை எதிர்கொள்வதற்கான செயல் திட்டம் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனதெரிவிக்கப்பட்டது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது தொடர்பாக உரிய அறிவுரைகள்வருவாய்த்துறை மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மேற்கண்டஅறிவுரைகளுக்கேற்ப வெப்ப அலை தாக்கம் குறித்து உரிய கண்காணிப்பு செய்யப்பட்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chief secretary to government held a review meeting in the secretariat on heat wave action plan with heads of all departments

அடுத்த செய்தி