ஆப்நகரம்

தற்கொலை முயற்சியில் கைக்குழந்தைக்கு இப்படியொரு அதிர்ஷ்டம் - ஆனால்?

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் கைக்குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டு உள்ளது.

Samayam Tamil 25 Nov 2019, 1:32 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ரயில் நிலையம் அருகே பெண்(30) ஒருவர் இன்று அதிகாலை தனது கைக்குழந்தை உடன் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பெங்களூருவை நோக்கி செல்லும் மயிலாடுதுறை விரைவு ரயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
Samayam Tamil Baby Delivery


இதில் பெண் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ஆனால் அப்பெண் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் உடனே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை: உங்க ஊரு அந்த லிஸ்ட்டுல வருதான்னு பார்த்துக்கோங்க!

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் கைக்குழந்தையை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பெண் யார் என்று இதுவரை தெரியவில்லை.

நான் ஓபிஎஸ்ஸை அப்படி சொல்லவில்லை: குருமூர்த்தி தரக்குறைவாக பேசியது யாரை?

இதற்கிடையில் அந்த பெண் குழந்தைக்கு யாராவது உறவினர்கள் இருக்கிறார்களா என்று விசாரணையில் இறங்கியுள்ளனர்.

சதுரகிரி மலைக்கு செல்வது ஆபத்து; 2வது நாளாக தடை!

அடுத்த செய்தி