ஆப்நகரம்

சிறுமி கொலை வழக்கு; செய்தியாளர்கைளப் பார்த்து தஷ்வந்த் ஆவேசம்!

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தேவையில்லாமல் செய்திகள் போடாதீர்கள் என்று தஷ்வந்த் ஆங்கிலத்தில் ஆவேசமாக பேசினார்.

Samayam Tamil 19 Feb 2018, 3:51 pm
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தேவையில்லாமல் செய்திகள் போடாதீர்கள் என்று தஷ்வந்த் ஆங்கிலத்தில் ஆவேசமாக பேசினார்.
Samayam Tamil child hasini murder dashwanth case judgement
சிறுமி கொலை வழக்கு; செய்தியாளர்கைளப் பார்த்து தஷ்வந்த் ஆவேசம்!


சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் ஹாசினியை கடந்த பிப்ரவரி மாதம், தஷ்வந்த் என்ற வாலிபர் கடத்திச் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக, கொன்று விட்டு தீ வைத்து எரித்துள்ளார்.


பின்னர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த்தை, அவரது தந்தை ஜாமீனில் விடுதலை செய்ய கோரினார். அப்போது, குற்றத்தை நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்களை போலீசார் தாக்கல் செய்யாததால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்தே, தஷ்வந்திற்கு ஜாமின் கிடைத்தது.

ஜாமினில் தஷ்வந்த் வெளிவந்த நிலையில், தன் தாயையும் கொன்று, வீட்டிலிருந்த நகை பணத்துடன், தலை மறைவானார்.

தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டாா். ஆனால் காவல் துறையின் பிடியில் இருந்து லாபகமாக தப்பித்து விட்டாா். பின்னா் மீண்டும் அவா் கைது செய்யப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட்டாா்.

இந்நிலையில் இது தொடா்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி தஷ்வந்த் மீதான தண்டனை விவரத்தை இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

அதன்படி, போலீசார் கைப்பற்றி ஆதாரங்களின் அடிப்படையில், ஆள்கடத்தல், கொலை, பாலியல் வன்கொடுமை உட்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர் தண்டனை விவரம் நேரம் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
அப்போது, நீதிமன்றத்தில் வெளியே நின்றிருந்த செய்தியாளர்களைப் பார்த்து, தேவையில்லாமல் செய்திகளைப் போடாதீர்கள் என்று ஆங்கிலத்தில் ஆவேசமாக திட்டினார்.

அடுத்த செய்தி