ஆப்நகரம்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - பள்ளிக்கல்வி அமைச்சர் சூப்பர் தகவல்!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்

Samayam Tamil 23 Nov 2021, 10:56 pm

ஹைலைட்ஸ்:

  • இனிமே இப்படி தான்
  • பள்ளிக்கல்வி அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Class Rooms
கோப்பு படம்
1098 மற்றும் 14417 ஆகிய குழந்தை பாதுகாப்பு எண்கள், இனி, அனைத்து வகுப்பு அறைகளிலும் ஒட்டப்படும் என, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில், அண்மைக்காலமாக, பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், பள்ளி ஆசிரியர்களாலேயே மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நல் நூலகர்களுக்கான அரங்கநாதன் விருது வழங்கும் விழா மற்றும் "உங்கள் நூலகம் உங்கள் கையில்"என்ற செயலி ஆகியவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
வெளிநாட்டு பயணிகளுக்கு ஷாக் - தமிழக அரசு கிடுக்கிப்பிடி!
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:
தற்போதைய சூழலில் சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்து விட்டு அனைத்து மாணவர்களையும் நேரடியாக வாரத்தில் 6 தினங்களும் வகுப்புகளுக்கு வரவேற்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை.
தனியார் பள்ளிகள் கொரோனா காலத்தில் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்க வேண்டாம்.

கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தவிர்த்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் தங்களின் சமூகப் பொறுப்பாக உணர்ந்து தனியார் பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடத்திலும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் இடத்திலும் பெற்றோர்கள் நேரடியாக புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 1098 மற்றும் 14417 ஆகிய குழந்தை பாதுகாப்பு எண்கள் இனி அனைத்து வகுப்பு அறைகளிலும் ஒட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி